இலங்கையில் நாள் ஒன்றின் அதி கூடிய கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது. இதன்படி, (25)ம் திகதி கோவிட் தொற்றினால் 209 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது.
நாளொன்றில் முதல் தடவையாக 200தை தாண்டிய கோவிட் மரணங்கள் (25) பதிவாகியுள்ளன.
இதேவேளை, கொவிட் தொற்றினால் நேற்றைய தினம்(26) 4,597 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 412,370 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொவிட் தொற்றினால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,353ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.