காட்டு யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த முதியவர்

தம்புள்ளை, கண்டலாம பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 67 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் ஆண்டுதோறும் மனித-யானை மோதலால் சுமார் 300 யானைகளும், 100 நபர்களும் உயிரிழப்பதாக தரவுகள் வெளிக்காட்டியுள்ளன.
புதியது பழையவை