கொவிட் தொற்று என கூறி இலங்கை வராமல் வெளிநாடுகளில் தங்கியுள்ள கல்வியிலாளர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் இலங்கை பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட பலர் பணியை விட்டு விலகியதாக கருதப்படுவார்கள் என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சில பேராசிரியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு இடங்களில் பணி செய்வதாக கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, இது தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.