கிளிநொச்சியில் ஆவா குழு சந்தேக நபர் கைது


கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முசுரம் பிட்டி பகுதியில் ஆவா குழு என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இவர் நேற்றைய தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ஒரு வாள், ஆவா குழு என பொறிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என்பன அடங்கிய தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தருமபுர பொலிசார் குறித்த நபரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிவைப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சிசேர தெரிவித்தார்.
புதியது பழையவை