கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை, கிழக்கு கடற்படைப் பகுதியின் புதிய தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ், திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து நேற்று சந்தித்தார்.
சஞ்சீவ டயஸ் பதவியேற்ற பின்னர் ஆளுநரைச் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.
ஆளுநருக்கும் சஞ்சீவ டயஸுக்கும் இடையே விசேட கலந்துரையாடலும் இதன்போது நடைபெற்றது.