குறைந்த மாணவர் தொகையை கொண்ட பாடசாலைகளை, மீளத் திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில், 200 ற்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக, எதிர்வரும் 2 வாரங்களின் பின்னர் திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
200 ற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட, சுமார் 5 ஆயிரம் பாடசாலைகளை முதலில் திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க, அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை, முதலில் திறக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது கல்வி துறைசார் ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பாடசாலை போக்குவரத்து சேவை ஊழியர்கள், விரைவில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
என குறிப்பிட்டுள்ளார்.