தமிழரசுக் கட்சியின் ஐ.நா ஆவணம் பற்றிய உண்மைகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க்குற்றம் பற்றி சுட்டிக்காட்டும் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஐ.நா ஆவணம் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பல தடவைகளாக ரெலோ ஊடாக எம்.ஏ.சுமந்திரனுடன் தொடர்புகொண்ட போதும் இழுத்தடிக்கப்பட்டதாலேயே கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள், சி.வி.விக்கினேஸ்வரன் தரப்புடன் இணைந்து மகஜரொன்றை தயாரித்த நிலவரத்தை விளக்கினார்.

அத்துடன், தமிழரசு கட்சிக்குள் இருந்து மற்றொரு ஆவணம் அனுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சி பற்றியும், கிளிநொச்சியில் சி.சிறீதரன் தமிழரசு கட்சி முக்கியஸ்தர்கள் ஒன்பது பேரது மகஜரை தானே வடிவமைத்து ஒழுங்குபடுத்தி அதில் அவரே ஒப்பமிட்டதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.

ஐ.நா அமர்விற்கு முன்னதாக அனைத்துக் கட்சிகளும் ஒன்று கூடி ஆராய்வதற்கு அழைப்பு விடுத்த போது - தற்போதைய அமர்வு முக்கியமற்றதென சொல்லிய எம்.ஏ.சுமந்திரன், பின்னர் சம்பந்தன் ஊடாக ஐ.நாவிற்கு மகஜர் அனுப்பியது எதற்காக என சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
புதியது பழையவை