மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும், எந்தவொரு வெளிப்புற முன்முயற்சிகளுக்கான முன்மொழிவையும் நிராகரிப்பதாக, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவை, அதன் ஸ்தாபகக் கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும் எனவும், மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும், எந்தவொரு வெளிப்புற முன்முயற்சிகளுக்கான முன்மொழிவையும் நிராகரிப்பதாகவும், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரில், மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கைக்கு, இலங்கை அரசாங்கத்தின் சார்பில், இன்று, இத்தாலியில் இருந்து, தொலை காணொளி வழியாக பதிலளித்து உரையாற்றுகையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 46ஃ1 ஆல் நிறுவப்பட்ட, எந்தவொரு வெளிப்புற முன்முயற்சிகளுக்கான முன்மொழிவை, நாங்கள் நிராகரிக்கும் அதேவேளை, சம்பந்தப்பட்ட விடயங்களில் உள்நாட்டு செயன்முறைகள் கையாளப்படுகின்றன.
தீர்மானம் 30ஃ1 இனால், நாங்கள் அனுபவித்தபடி, இது எமது சமூகத்தைத் துருவப்படுத்தி விடும்.
மனித உரிமைகள் பேரவை, அதன் ஸ்தாபகக் கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட வெளிப்புற முயற்சிகளால், அந்த நாட்டினால், குறிப்பிட்ட இலக்குகளை அடைந்து கொள்ள முடியாது.
அது அரசியல்மயமாக்கலுக்கு உட்படுத்தப்படும்.
என குறிப்பிட்டுள்ளார்.