யாழ்.வேலணையில் பிறந்து மட்டக்களப்பில் ஆர்.டி.ஒ ஆக முன்னாள் மட்டு அரச அதிபர் அந்தோனிமுத்து அவர்களுடன் மட்டக்களப்பு மக்களுக்கு சேவையாற்றிய சித்திரவேலு அவர்கள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலக உயர் அதிகாரியாக முன்னாள் மட்டு அரச அதிபர் மௌனகுரு சாமியுடன் கடமையாற்றி மட்டக்களப்பு மக்களுக்கு சிறந்த சேவையாற்றியுள்ளார்.
பின்னர் கெயார் இன்டர்நெசனல் நிறுவனத்தின் வடக்கு கிழக்கு பணிப்பாளராக கடமையாற்றி மக்களிற்கான தேவைகளையும் யுத்த காலத்தில் திறம்பட செய்து முடித்தவர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் செஞ்சிலுவை சங்க உயர் அதிகாரியாக கடமையாற்றிய காலத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபர் கணேஸ் அவர்களுடன் இணைந்து சேவையாற்றி யாழ்.மாவட்ட மக்களின் நற்பெயரினை பெற்றுக்கொண்டார்.
யுத்த இறுதி காலத்தில் வன்னி மக்களுக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள், மருத்துவ பொருட்கள், என்பனவற்றை செஞ்சிலுவை சங்க அதிகாரியாக அச்சுறுத்தல் மத்தியிலும் பாதுகாப்பாக வன்னிக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்தவர்.
குறிப்பிட்ட செஞ்சிலுவை சங்கத்தின் உயர் அதிகாரி, அன்னாரது பிரிவு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களுக்கு பேரிழப்பாகும் என தமது அஞ்சலியினை தெரிவித்துள்ளார்.