இந்திய இராணுவ குழுவொன்று திடீரென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளது.
அதன்படி குறித்த குழுவானது பிராந்தியத்தில் மிகப்பெரிய இராணுவ கூட்டுப் பயிற்சியான மித்ர சக்தி உள்ளிட்ட இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து இலங்கை இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக வந்திருப்பதாக தெரியவருகிறது.