இலங்கையில் நேற்றைய(31) தினம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 215 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,400 ஆக பதிவாகி உள்ளது.
சுகாதார அமைச்சின் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய(01-09-2021) தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,828ஆக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.