பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிசிஆர் ஆய்வகமொன்று இம்மாதம் 20 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சரான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இப்புதிய பிசிஆர் ஆய்வகமானது நாளாந்தம் 7,000 பிசிஆர் சோதனைகளை முன்னெடுக்கவுள்ளது.
இதன் மூலம் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் பிசிஆர் சோதனை அறிக்கையானது மூன்று மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.