முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் சில சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு முச்சக்கரவண்டிகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பது தொடர்பான சில சட்ட திருத்தங்களுடன் கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடையே கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில் பிரதமரிடம், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கலந்துரையாடிய நிலையில் குறித்த அனுமதி வழங்கப்பட்டதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை