தனிமையில் வீட்டில் இருந்த யுவதி இனந்தெரியாத நபரால் துஷ்பிரயோகம்

பண்டாரவளை-அம்பே தன்டகம பிரதேசத்தில் தனிமையில் வீட்டில் இருந்த 18 வயது யுவதி இனந்தெரியாத ஒருவரினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று (21)செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளதாக பண்டாரவளைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தனிமையிலிருந்த யுவதியை துஸ்பிரயோகம் செய்த இனந்தெரியாத நபர் தப்பியோடியுள்ளார்.

குறித்த யுவதி தற்போது பண்டாரவளை அரசினர் மருந்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை