இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை