நாட்டில் கொரொனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு மதுபானசாலைகளும் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் அரசாங்கத்தினால் மதுபானசாலைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளின் முன்பாகவும் நீண்ட வரிசையில் மது பிரியர்கள் காத்திருந்து மதுபானத்தை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாகவுள்ளது.
மதுபானசாலைகளுக்கு அண்மையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு சமூக இடவெளி, பேணப்படவில்லை எனபதனையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது.