கொழும்பிலுள்ள சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்துக்கு 17 வயதான பாடசலை மாணவன் ஒருவர் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
முகப்புத்தகத்தில் அவரால் இடப்பட்டதாக கூறப்படும் பதிவொன்று தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக்கொள்வதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குருணாகலை, வாரியபொல - கும்புக்கெட்டே பகுதியைச் சேர்ந்த 17 வயதான மணவன் ஒருவரே இவ்வாறு எதிர்வரும் 15 ஆம் திகதி சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்ட பதிவொன்று தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.