முச்சக்கரவண்டி தீப்பற்றி கொண்டதில் ஒருவர் பலி

முச்சக்கரவண்டியொன்று திடீரென தீப்பற்றிக் கொண்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

மஹவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லேவ பகுதியில் இந்த சம்பவம் நேற்றைய தினம் பகல் இடம்பெற்றுள்ளது.

கொன்வெவ பிரதேசத்தில் வதியும் 73 வயதான நபர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புதியது பழையவை