மட்டக்களப்பில் மாடுகளை திருடி கடத்திச் சென்ற இருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவு காவல்துறை பிரிவிலுள்ள ஊத்துமடு பிரதேசத்தில் இருந்து மாடுகளை திருடி சிறிய வாகனம் ஒன்றில் காத்தான்குடி பிரதேசத்துக்கு கடத்திச் சென்ற இருவரை காஞ்சரம்குடா பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை (8) அதிகாலையில் கைது செய்யப்பட்டதுடன் 4 மாடுகளை மீட்டுள்ளதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.
விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்வின் ஆலோசனையில் வவுணதீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி கே.டி நிசாந்த அப்புகாமியின் வழிகாட்டலில் காவல் நிலைய நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரி குணவர்தன தலைமையில் டினேஸ், ஜெயவீர, வண்டார, மதுரங்க ஆகியேர் கொண்ட குழுவினர் சம்பவதினமான நேற்று அதிகாலை காஞ்சரம்குடி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

இதன்போது ஊத்துமடு வாழைக்காலை ஆகிய பிரதேசங்களில் இருந்து மாடுகளை திருடி சிறிய பட்டா ரக வாகனத்தில் கடத்தி சென்று வாகனத்தை மடக்கிபிடித்து இதில் இருந்த 4 திருட்டு மாடுகளை மீட்டதுடன் இருவரை கைது செய்ததுடன் சிறிய ரக வாகனம் ஒன்றையும் கைப்பற்றினர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 23, 32 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் காத்தான்குடி பிரதேசத்திற்கு இறைச்சிக்காக மாடுகளை திருடி கடத்தி செல்வதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்தவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய ஊரடங்கு காலத்தை சாதகமாக பயன்படுத்தி மக்கள் நடமாட்டம் இல்லாத வேளையில், மாட்டுபட்யலில் உள்ள மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக கடத்தி கொண்டு சென்ற சம்பவம் கடந்த இரு வாரங்களில் இது இரண்டாவது சம்பவம் என வவுணதீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.
புதியது பழையவை