பிரதமர் G 20 சர்வதேச மதநல்லிணக்க மாநாட்டில் நாளை விசேட உரை

இத்தாலி பயணித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ Bologna நகரில் ஆரம்பமாகவுள்ள G 20 சர்வதேச மதநல்லிணக்க மாநாட்டில் நாளை உரையாற்றவுள்ளார்.

இத்தாலி Bologna பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் 17 பேர் நேற்று இத்தாலி நோக்கி பயணித்துள்ளனர்.

இந்த நிலையில் இத்தாலி பயணித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரை Bologna Marconi விமான நிலையத்தில் அந்த நாட்டின்   அரச அதிகாரிகள் மற்றும் இத்தாலிக்கான இலங்கை தூதுவர் அலுவலக  அதிகாரிகள் வரவேற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதம  உரையாற்றுமாறு   பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர்  இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

கலாசாரங்களுக்கிடையில்  சமாதானம், மதங்களுக்கிடையில் புரிதல்’ எனும் தொனிப்பொருளில் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது
இதேவேளை பிரதமரின் இத்தாலி விஜயத்தின் போது இத்தாலி ஜனாதிபதி (Mario Draghi), ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் David Sassoli மற்றும் ஸ்லோவேனியா ஜனாதிபதி Borut Pahor உள்ளிட்டவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை