தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக 41 நாட்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த லொத்தர் விற்பனை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகள் தெரிவிக்கின்றன.
அதன்படி ஓகஸ்ட் 21ஆம் திகதி விற்பனைக்கு வரவிருந்த லொத்தர் சீட்டுகள் நாளை சந்தைக்கு வெளிவிடப்படவுள்ளன.
ஓகஸ்ட்டுக்காக அச்சிடப்பட்ட மீதமுள்ள லொத்தர் சீட்டுகள் பின்னர் சந்தைக்கு வெளிவிடப்படும் என்று லொத்தர் சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் போது 41 நாட்களாக லொத்தர் சீட்டுகளை விற்க முடியாததால் தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகள் சுமார் 600 மில்லியன் ரூபா வருவாயை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
