மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையில் நவராத்திரி

நவராத்திரியின் இறுதி நாளான விஜயதசமியில் இன்று(15) மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையில் விசேட நவராத்திரி பூஜைகள் இன்று நடாத்தப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் பிரதேசசபை உறுப்பினர்கள்,பிரதேசபை செயலாளர் பா.சதீஸ்கரன்,உத்தியோகஸ்தர்கள்,ஊழியர்கள் கலந்து கலந்துகொண்டனர்.

இதன்போது முப்பெரும் தேவிகளை வேண்டி விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதுடன் கூட்டு பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.


புதியது பழையவை