விவசாயத்திற்கு உரத்தை வழங்கக்கோரி மட்டக்களப்பில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன

விவசாயத்திற்கு உரத்தை வழங்கக்கோரி மட்டக்களப்பிலும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

குறித்த போராட்டமானது வெல்லாவெளி கமநல பிரிவுக்கு முன்னால் காலை 8 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அரசே உடன் உரம் வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு ஒளி வேண்டும், மண்வளத்தை மாற்றானுக்கு விற்பனை செய்வதை நிறுத்து, உரம் இன்றி உழவு இல்லை, உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதியது பழையவை