அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பம்

நாட்டில் உள்ள அனைத்து கனிஷ்ட பிரிவு பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் முதல்கட்டமாக கடந்த 21ஆம் திகதி ஆரம்பமானது.

இரண்டாம் கட்டமாக 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் நாளை (25) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொண்ட வகுப்புகளை நடத்தும் போது மாணவர்களை பகுதி பகுதியாக அழைத்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாடசாலையின் அதிபர்களுக்கு முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் முழுமையாக வகுப்புகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை