நாட்டில் திருமண நிகழ்வுகளுக்கு புதிய கட்டுப்பாடு

நாட்டில் எதிர்வரும் நாட்களில் திருமண நிகழ்வு நடைபெறும்போது மண்டபங்களுக்குள் நுழைய, கொரோனா தடுப்பூசி இரண்டையும் பெறாத நபர்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை திருமண சேவைகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் 50 பேருடன் திருமண நிகழ்வுகளை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் நடத்துவதற்கு சுகாதார பிரிவு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், சுகாதார அமைச்சின் அனுமதியை முன்னெடுத்து செல்வதற்கான, சந்தர்ப்பத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு திருமண சேவைகள் சங்கத்தின் அதிகாரிகள் ஹோட்டல் உட்பட அனைத்து தரப்பினரிமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை