கடந்த இரண்டாம் திகதி புல்வெட்டுவதற்கு சென்ற நிலையில் காணாமல் போன 60 வயதுடைய ஆண் ஒருவர் முதலைக்கடிக்கு உள்ளாகிய நிலையில் அம்பாறை ஓலுவில் களியோடை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளது.
நிந்தவூர் அட்டடைப்பள்ளத்தைச் சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அழகையா ஞானசேகரம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
