அத்தியாவசிய பொருட்களுடன் கழுத்தில் தூக்கு கயிற்றினை அணிந்து சபைக்கு வந்த உறுப்பினர்

நாட்டில் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா அத்தியாவசிய பொருட்களுடன் இன்று இடம்பெற்ற பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டார்.

சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமயல் எரிவாயு சிலிண்டர்களை உடலில் சுமந்தும், கழுத்தில் தூக்கு கயிற்றினை அணிந்தும் தனது எதிர்ப்பினை அவர் வெளியிட்டார்.

இதன்போது, , மக்கள் பெரும் சுமைக்குள் தள்ளியுள்ளதாக அரசாங்கத்தினை சபையில் கடுமையாக விமர்சித்த நிலையில், பிரதேச சபை உறுப்பினரின் போராட்டம் நியாயமானது என பிரதேச சபை தவிசாளர் சபையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை