மட்டக்களப்பில்-தோட்டக் காணியில் இருந்து மோட்டார் குண்டு மீட்பு

வாழைச்சேனை காவல்துறை பிரிவில் வாகனேரி குளத்துமடு பிரதேசத்தில் தனியார் ஒருவரின் தோட்ட காணியில் இருந்து பழைய மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஜயபெரமுன தெரிவித்தார்.

தற்போது பெரும்போக வயல் வேலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வாகனேரி குளத்துமடு பிரதேசத்தில் விவசாயி தனது தோட்ட காணியில் வேலை செய்து கொண்டிருந்த போது மோட்டார் குண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.

அதனையடுத்து குறித்த விவசாயி வாழைச்சேனை காவல்துறைக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவ்மோட்டார் குண்டு மீட்கப்பட்டதாக காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இம்மோட்டார் குண்டு யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்றும் தற்போது விவசாய தேவைக்காக காணியில் வேலைசெய்யும் போது மோட்டர் குண்டு தென்பபட்டதையடுத்து காவல்துறையினர் மோட்டார் குண்டினை மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதியது பழையவை