மட்டக்களப்பில் வீடு ஒன்றின் மீது இடி மின்னல் தாக்கம்

மட்டக்களப்பில் வீடு ஒன்றின் மீது இடி மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள வீடொன்றிலேயே இடி, மின்னல் தாக்கிய சம்பவம் சனிக்கிழமை நள்ளிரவு 1.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

 குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் மாமா உள்ளிட்ட மூவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

குறித்த வீட்டின் பின்னால் உள்ள தென்னை மரத்தை தாக்கிய இடி மின்னல், வீட்டையும் தாக்கியுள்ளது. இதன் போது வீட்டின் கூரை உள்ளிட்ட சுவர்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் மின்னிணைப்புக்கள் முற்றாக எரிந்துள்ளதோடு, வீட்டினுள் காணப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான மின் சாதனப்பொருட்களும் எரிந்து சேதமடைந்துள்ளது.
புதியது பழையவை