கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த மூன்று உறுப்பினர்களும் மூவினத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில அளவையாளர் ஆரியரத்ன திசாநாயக்க, ஓய்வுபெற்ற மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், விரிவுரையாளா் முபிசால் அபூபக்கா் ஆகியோர் இந்த ஜனாதிபதி செயலணியின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஜனாதிபதி செயலணி கடந்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. செயலணியின் உறுப்பினர் கட்டமைப்பை விரிவாக்கும் நடவடிக்கைகளுக்கமைய இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.