மட்டக்களப்பில்-ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஆசிரிய மாணவர்களுக்கு நேற்று (29) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எஸ். கிரிசுதனின் மேற்பார்வையில் பொது சுகாதார பரிசோதகர் ரீ.மிதுன்ராஜ் தலைமையில் இப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலிருந்து பரீட்சையொன்றிற்குத் தோற்றவுள்ள 125 ஆசிரிய மாணவர்களுக்கு இவ் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
புதியது பழையவை