மட்டக்களப்பில் வெட்டி கொலை- தனது மனைவிக்கு நடைபெற்றதுபோன்ற துயரச்சம்பவம் இனியொருவருக்கு நடைபெறாத வகையில் தண்டனை வழங்கவேண்டும்

மட்டக்களப்பில் வெட்டி கொலை செய்யப்பட்ட தனது மனைவிக்கு நடைபெற்றதுபோன்ற துயரச்சம்பவம் இனியொருவருக்கு நடைபெறாதவண்ணம் சட்டம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என அண்மையில் மட்டக்களப்பில் வெட்டிக்கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவரான க.செல்வராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பான வாக்குமூலம் பெறுவதற்காக கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

குறித்த வழக்கானது எதிர்வரும் ஜனவரி 04ஆம் திகதிக்கு நீதிவான் நீதிமன்ற நீதிபதியினால் ஒத்திவைக்கப்ப்பட்டது.

இதனிடையே தனது தாயின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு மிக விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என உயிரிழந்தவரின் மகள் வலியுறுத்தியுள்ளார்.

யாழில் மாணவி வித்தியாவுக்கு நடைபெற்றதுபோன்று நீதிவழங்குவதற்கு இழுத்தடிப்புகளை செய்யாமல் உடனடியாக நீதியை வழங்குவதன் மூலமே எதிர்காலத்தில் இவ்வாறான கொலைகளை தடுக்குமுடியும் எனவும் மகள் தெரிவித்தார்.

எங்களுக்கு வேறு யாரிலும் நம்பிக்கையில்லை.நீதிபதியை மட்டுமே நம்புகின்றோம்.அவர் எங்களுக்கு நீதியை வழங்கவேண்டும் எனவும் உயிரிழந்தவரின் கணவர் க.செல்வராஜா தெரிவித்தார்.

சிலர் உண்மைக்கு புறம்பான விடயங்களை எழுதிவருவதாகவும் சரியானதை மட்டும் எழுதுமாறும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

புதியது பழையவை