உலக எய்ட்ஸ் தினம் இன்று

இலங்கையில் கடந்த சில நாட்களாக HIV நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இலங்கையில் கடந்த சில வருடங்களாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பபோட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலக எய்ட்ஸ் தினமான இன்று அரசாங்க தகவல் திணைக்களம்விடுத்த அறிக்கையிலே இவை தெரிவிக்கப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டில், நாட்டில் 363 புதிய எய்ட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டதாகவும் 2019 இல் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 439 ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை