மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கல்கிரியாகம பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளைஞரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம் பெற்றள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதிகொல்லாகம வாவியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞரே இவ்வாறு மின்சார தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞரை கல்கிரியாகம வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

21 வயதுடைய உல்பதகம பகுதியை சேர்ந்நதவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மேலும் சிலருடன் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையை தொடர்ந்து கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த தருணத்தில் யானைக்காக போடப்பட்டிருக்கும் மின்சார வேலி குறித்த நபரின் மீது விழுந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை