ஜனாதிபியின் எண்ணக்கருவில் உதித்த சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்துக்கமைய உருவாக்கப்பட்ட பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாடுகள் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (29) மாவட்டச் செயலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம் பெற்றது.
உதவி மாவட்ட செயலாளர் திரு. எஸ். நவேஸ்வரன் தலைமையில் பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் மேஜர்.கே.பீ கமகே அவர்களின் எற்பாட்டில் இடம்பெற்றது.
இதில் மாவட்ட, பிரதேச செயலக ரீதியாக இத் திணைக்களத்துக்கு இனைத்துக்கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தில் 1ம் கட்டமாக 246 பேருக்கு தொழில் வழங்கப்பட்டு அவர்களுக்கான தொழிற்பயிற்சிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
(NVQ-03) கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான நிரந்தர நியமனம் எதிர்வரும் நாட்களிள் வழங்கப்படவுள்ளது. 2ம் கட்டமாக யானை வேலி பராமரிப்புக்காக 183 பேர் வனஜிவராசிகள் திணைக்களத்திற்கு விசேடமாக முன்னுரிமை அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
வாகரை பிரதேச செயலகத்தில் 34 பேரும் செங்களடி பிரதேச செயலகத்தில் 100பேரும் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் 23பேரும், வவுனதீவு பிரதேச செயலகத்தில் இருந்து 26 பேரும் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.