நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கையில் டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 47,120 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரை 152,109 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா மையமாக மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், 2022 ஆம் ஆண்டு ‘இலங்கையை காண்போம்’ என்ற ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலகளாவிய மேம்பாட்டுத் திட்டத்துக்கு அமைவாக இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை