மட்டக்களப்பு மாவட்ட புதிய சமுர்த்திப் பணிப்பாளர்-சி.புவனேந்திரன்

இலங்கை நிர்வாக சேவையினைச் சேர்ந்த திரு.சிசுபாலன் - புவனேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு கிரான்குளம் கிராமத்தைச் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியினை மட்/கிரான்குளம் விநாயகர் வித்தியாலயத்தில் கற்றதுடன் 1995 இல் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று நகர்ப்புறப் பாடசாலையில் கல்வி பயிலச் சந்தர்ப்பம் கிடைத்தும் கூட தனது கிராமத்தில் உள்ள மட்/கிரான்குளம் விநாயகர் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை பயின்று கிழக்கு பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

பல்கலைக் கழகத்தில் அரசறிவியலில் சிறப்புக் கற்கை பயின்ற இவர் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 2011 – 2012 காலப்பகுதியில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றி வந்தார்.

இந்நிலையில் 2012 இல் இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட இவர் பசறை பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக முதல் நியமனத்தைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக பணிபுரிந்த இவர் 24.01.2022 ஆம் திகதி முதல் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக கடமையாற்றுவதற்கான நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது.

மிகவும் நேர்மையான உற்சாகமாக சேவை நாடி வரும் பயனாளிகளுக்கு உடன் சேவை வழங்கும் அதிகாரியாக செயற்பட்டு வரும் இவர் கிரான்குளம் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.
புதியது பழையவை