கடலில் குளிக்கச் சென்ற மூன்று சிறுமிகள் மாயம்

மாத்தறை – வெலிகம பகுதியில் கடலில் நீராடச் சென்ற ஐந்து சிறுமிகளில் மூவர் இன்று முற்பகல் காணாமல்போயுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய இருவரும் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று வெலிகம பொலிஸார் அறிவித்துள்ளனர்.

காணாமல்போயுள்ள மூன்று சிறுமிகளையும் தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று வெலிகம பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை