நாட்டில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாமிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவெட பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சந்தேகநபர் ஒருதொகை சிகரட்டுகளுடன் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதன்போது 13,300 வரியில்லா சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், காலி துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை