மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றில் முதல் தடவையாக பாரியளவிலான நிதியொதுக்கீட்டில் வீதியமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் மாவட்ட தமிழ் பிரதேச பரமசிவம் சந்திரகுமார், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக இந்த வீதியை புனரமைப்பதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 1608 மில்லியன் ரூபா செலவில் சுமார் 43கிலோமீற்றர் வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையிலிருந்த கிரான்-குடும்பிமலை வீதி மற்றும் இலுப்பையடிசேனை-05ஆம்கட்டை சந்தி வரையிலான வீதிகளும் வேப்பவட்டுவான் வீதி ஆகியவற்றின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டன.
குறித்த வீதியினை புனரமைக்க நடவடிக்கைகளை எடுத்த அரசாங்கத்திற்கும் பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் மாவட்ட தமிழ் பிரதேச பரமசிவம் சந்திரகுமாருக்கும் பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதன்போது உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் மாவட்ட தமிழ் பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்ததாவது,
இலங்கை அரசாங்கம் அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முழு நாட்டுக்கும் சமனாகவே வழங்குகின்றது.
இனவேறுபாடுகள் பார்க்காமல் பல்வேறு உதவி திட்டங்கள் வழங்கப்படுகின்றது.
யுத்ததினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எனக்கு மட்டுமே 8000 மில்லியன் ரூபா பெறுமதியான வீதிகள் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது.




