மாத்தளை, வாரியபொல பிரதேசத்தில் 11 வயது சிறுவன் ஒருவரை பல நாட்களாக காணவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
கடைசியாக சாம்பல் நிற டி-சர்ட் மற்றும் நீல நிற டெனிம் கால்சட்டை அணிந்திருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த தேர் திருவிழா தினத்தில் இருந்து குறித்த சிறுவனை காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
குறித்த சிறுவன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது வாரியபொல பிரிவுக்கு பொறுப்பான கிராம சேவையாளருக்கோ மற்றும் 0707778940 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டோ அறிவிக்குமாறு . பொதுமக்களிடம் கோட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
