காலி - பூஸா பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரயிலுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நான்கு பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெலியத்த பிரதேசத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரஜின விரைவு ரயிலில் இந்த முச்சக்கர வண்டி இன்று மோதுண்டுள்ளது. பூசா பகுதியில் வைத்து இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.