1,400 கிலோகிராம் எடையுள்ள மாபெரும் காளி அம்பாள் விக்கிரகமொன்று, கிழக்கின் தென்எல்லையிலுள்ள குமுக்கன் ஆற்றுப்படுக்கையிலுள்ள குமுக்கன் மடத்தடி அம்மன் கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டுள்ளது.
வன அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பில், அவர்களின் நேரடி வழிகாட்டலில், குமண சரணாலயத்தில் மாபெரும் சக்தி பீடமாக விளங்குகின்ற குமுக்கன் ஆற்றங்கரையின் மடத்தடி அம்மன் கோவிலில் மாபெரும்காளி தேவியின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சித்தர்களின் குரல் அமைப்பின் பிரதானி சிவசங்கர் ஜீ இதனை பிரதிஷ்டை செய்துவைத்தார்.








