மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்குள்-அடையாளம் காணப்படாத சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்குள் இருந்து சடலமொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை