நாளை ஆறு மணி நேரத்திற்கும் மேற்பட்ட காலப்பகுதியில் மின்தடை

நாடளாவிய ரீதியில் நாளைய தினமும் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி நாளைய தினம் 6மணித்தியாலத்திற்கு மேற்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய  A   முதல் L  வரையான 12  வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான  காலப்பகுதிக்குள்  3 மணித்தியாலமும்  20 நிமிடங்களும்   மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.  

அத்துடன், குறித்த வலயங்களில்  மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களும்  மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும்   P  முதல் W  வரையான   8 வலயங்களில்  நாளைய தினம்  6 மணித்தியாலமும் 20  நிமிடங்களும்   இவ்வாறு மின் விநியோகத்தடை  அமுல்படுத்தப்படவுள்ளது.  

இதன்படி   குறித்த காலை 08.30 முதல் மாலை 05.30 வரையான காலப்பகுதிக்குய்  4 மணித்தியாலமும்  30 நிமிடங்களும், மாலை 05.30  முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள்  1 மணித்தியாலமும்  50 நிமிடங்களும்   மின் விநியோகத்தடை    அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை