மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் நேற்றைய தினம் தமிழர்களின் பண்டைய பாரம்பரிய முறையிலான திருமண நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது நெற்கற்றைகளினால் வடிவமைக்கப்பட்ட மாட்டு வண்டியில் மணமகனும், மணமகளும் ஆலயத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு திருமணம் நிகழ்த்தி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த திருமணம் இடம்பெற்ற வீடும் நெற்கற்றைகளினால் சோடனை செய்யப்பட்டிருந்ததுடன், நிகழ்வுகள் பாரம்பரியங்களை பேணியதாக நடைபெற்றுள்ளது.





