யாழில்-டெங்கு நோயால் உயிரிழந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

டெங்கு நோய்ப் பாதிப்புக்குள் ளான நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி உயிரிழந்த யாழ்ப்பாணம் மீசாலையைச் சேர்ந்த வசந்தன் அஜய் என்ற மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு வெளியாகின.

குறித்த முடிவுகளின் அடிப்படை யில் அஜய் 155 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இவ்வாண்டுக்கான யாழ். மாவட்ட வெட்டப்புள்ளி 148 என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை