13 வயது சிறுமியை அவரின், தாத்தா, தாய் மாமன், மூத்த சகோதரனால் தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் மொனராகலை எதிமலே என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த சிறுமி வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தொடரப்பட்ட விசாரணைகளிலேயே சிறுமி தாத்தா, தாய் மாமன், சகோதரனால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தெரிய வந்தது.
இதையடுத்து, சிறுமியை துஷ்பிரயோகம் செய்த அனைவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அறிய வருகின்றது.
