நீர்கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்ற 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இயந்திர படகு ஒன்றின் மூலம் சென்ற அவர்களை தென்கிழக்கு கடலில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அம்பாறை பாணமை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகை கடற்படையினர் சுற்றிவளைத்து இடைமறித்து சோதனையிட்டபோது சட்டவிரோதமாக பயணித்த 36 பேர் சிக்கினர்.

