புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் போது, அவர்கள் அனுப்பும் தொகையின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் நாட்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வாகன இறக்குமதி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி முறைமை மூலம் சட்டபூர்வமாக பணம் அனுப்பும் வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு மாத்திரம் இவ்வாறு
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை